Sunday 8 June 2008

.


உறுதியுடன்....
இணைகின்ற பயணம்..

… இமைக்கின்ற,
நடக்கின்ற, போதெல்லாம்
காலங்கள் நம்மைவிட்டு
கடக்கின்றது.

எவ்வளவு காலம்தான்
நாமே நம்மைப்பற்றி
குறை சொல்லிக்கொண்டே…

இதுவே
நமது வளர்ச்சிக்குதடையாக
இருக்குமல்லவா?

தனித்
தனியே ஒரு யாகம்
நமக்குள் நடக்கட்டும்.

தூய்மையான
உயிர்களின் நடமாட்டம்
நன்மையானதே! பூமி மகிழும்.

கவியரசரின் வரிகள் போல்
(போற்றுவோர் போற்றட்டும்…)
என்றும்
உறுதியுடன்.

பங்குனி 2002 -அருவி1 -ஊற்று3- அருவி பத்திரிகையின் பிரதம ஆசியர். என் பதிவு

No comments: