Friday 30 January 2009



தமிழீழ விடுதலைப்புலிகள் வீரவணக்கம்

Tuesday 24 June 2008

பொங்கு தமிழ் பொங்கும்!


பொங்கு தமிழ் எங்கும் பொங்கும் !


விழி கொண்டெழுகிறோம் - விடுதலை
மொழி கொண்டெழுகிறோம்,


பனியும், காற்றும்
படர்ந்து வரும் எதிரி
நரியின் கூட்டும்
நம்மை என் செய்யும் இங்கே!


விண்வெளியில் பறக்கும்
விழிதிறந்த நீலப் புலி வானேறும்,
விடுதலையின் விடைவரும் காலம்
உலகின் மூலை முடுக்கெங்கும் தீ மூட்டும்.


அண்ணன் புதுவையே! கவி
கொண்டணைத்த புதுமையே!
புறப்பட்டோம்

ஒரு வழி
ஒரு தலைக் குடைக்கீழ்
எழுகிறது தமிழீழத்தமிழ்.


பிஞ்சும் கூனும் கிழமும்
நெஞ்சு நிமிர்த்தி
கூடுடைத்து
விழுது கொண்டு
வீதியிறங்கி வேர் தேடி வரும்.

விடுதலை கீதம் கேட்கிறது காதில்
தலைமகன் விடுதலை வரிமுகங்கள்
வரவேற்கும் மொழிகேட்கிறது.
பொங்குதமிழ்எங்கும் தங்கும் பொங்கும்!
அதிலிருந்து எழுகிறது தமிழுயிர்.
வருகிறோம்! வருகிறோம்!
வரலாற்றில் தமிழீழம்
வருகிறோம்! வருகிறோம்!



நேசமுடன் சு.பா.ஈஸ்வரதாசன்

Friday 20 June 2008

அகில உலகின் ஓசை ......


அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்அகவை 10
இறுவட்டுக்கான பாடல்
------------
ஓசை தமிழ் ஓசை
புலம் வாழ்வின் உறவோசை
நிலம் நீழும் இனவோசை - வான்
வலம் ஆழும் வானோசை
அகில உலகின் ஓசை ..... (ஓசை....)

இனம் வாழும் இடமெங்கும்
இசை மீட்டும் இனவுணர்வூட்டும்
திசை எட்டும்
கலை வள உள நிலை கிட்டும்
கடல் எல்லை அலை தாண்டும்
உடல் எங்கும் தமிழ் உயிர் கூட்டும்
அகில உலகின் ஓசை ..... (ஓசை)

வளமான எதிர்காலம்
வரும் காலம்
உளம் கானும்
இருள் காலம் இனி நீங்கும்
தமிழ் இனமானம் உலகோங்கும்
ஈழ மலர் பூக்கும் அக்காலம்
ஊர்கோலம் தமிழ்த் தேர் போகும்
உறவாகி உயர்வாகும் நமதாகும்
அகில உலகின் ஓசை (ஓசை )


சு.பா.ஈஸ்வரதாசன்.28.09.06

தமிழின விடியலின் மதி நுட்ப வழிகாட்டி!

1.
வாராய்! வாராய்!
வாசல் தேடிபாலா அண்ணலே!
உள்ளம் உருகி நோகுதே!
உயிரும் வருந்தி பாடுதே!
பாடும் பாடல் கேட்குதா? (வாராய்!)

ஈழம் என்னும் மூச்சிலும்
அறிவு கொண்ட பேச்சிலும்
அன்பில் என்றும் வாழ்ந்திடும் உள்ளம் நீரே பாலா!
உலக அரங்க காற்றிலும்
ஈழத் தமிழர் வீட்டிலும்
உந்தன் குரலே கேட்டதே! மறக்குமோ பாலா?
பல அர்த்தம் தந்த சின்னமே!
உறவான பால சிங்கமே!
மீண்டும் எழுந்து வாராயோ? (வாராய்!)

ஆழம் கொண்ட ஞானியாய்!
அண்ணன் அருகில் தோழனாய்!
உறவில் என்றும் நிலைத்திடும் எண்ணம் நீரே பாலா!
வீரம் பிறக்கும் நாட்டிலும்
ஈழத் தமிழின் ஏட்டிலும்
நித்தம் முகமே பூக்குதே!உறக்கமோ பாலா?
உலவி வந்த சந்தமே!
உறுமி வென்ற தமிழ்ச் சிங்மே!
மீண்டும் பிறந்து வாராயோ?(வாராய்!)

17.12.06


2.
பாலா அண்ணா! பாலா அண்ணா!
அரசியல் மன்னா!! எங்கள் பாலா அண்ணா!
அன்போடே உமையழைத்தோம்
அருகிருந்தே அறிவுதந்தீர்
அழவைத்தே மறைந்தீரோ? (பாலா அண்ணா)

தணியாத தாகம் கொண்டு தமிழீழ கீதம் பாடிடவே!
தமிழின தத்துவ அரசியல் ஞானக் குயிலே!
உயர் வானில் உலவி வந்த அறிவு நிலா! அண்ணா பாலா! (பாலா அண்ணா)

புரியாத சோகம் தந்து
விழி சிந்தும் ஈரம் தந்துதேம்ப வைத்தே சென்றீரோ?
தமிழன்னைத் தாலாட்டில் உறங்குகிறீரோ??
இருள் நீக்க வானம் தந்தஈழ நிலா! அண்ணா பாலா! (பாலா அண்ணா)

உம் முகமே நினைவு வரும்
நினைத்து நினைத்து அழுகை வரும்
உம் வாக்கு தந்த வீரத்திலே!
உயிர்த்து உயிர்த்து மனமிங்கே உரமாகும்
உரமாகி உரமாகி தமிழீழம் உருவாகும்
வாவா அண்ணா! அன்று பாலா அண்ணா!! (பாலா அண்ணா)

16.12.06

தமிழீழ விடுதலைப் பாதையில்,
தமிழின வரலாற்றின் அரசியல்,
வெற்றிப் பயணத்தின் மதிநுட்ப வழிகாட்டி!

தமிழின விடியலின் மதி ஒளிகாட்டி!
உலகத்தமிழினத்தின் உயிராழத்தில்
மாறாத முகமுமாய்,
மங்காத குரலொலியுமாய்
வாழ்ந்து கொண்டேயிருப்பீர்கள் மதி அகம்காட்டி!

14-12.06.


3.
ஏற்குமோ?
தமிழின உளமது ஏற்குமோ?
மதிமுகமே! மறந்து போகுமோ?
தேசமே தாங்குமோ?
அறிவாலமரமே! பாலாண்ணையே!
மனமெங்கும் குரலொலியே! தமிழ் மனதார மொழியிலையே! - அந்த மதிப் பயண வழியில்லையே! ( ஏற்குமோ)

தலைவனின் அருகினில்
அரசியல் ஒளிகாட்டி!
தமிழின விடியலின்
மதிநுட்ப வழிகாட்டி!
பேச்சுக் களங்களின் தடை நீக்கி - விடுதலை
வீச்சுக் களங்களில் உணர்வூக்கி
எதிரிக்கு அரசியல் எரிமலையே!
ஓய்ந்துபோனதோ அறிவலையே! (ஏற்குமோ)

மலையென மதியினில்
விடுதலைச் சுடரேற்றி!
உடையினில் பேச்சு
நடையினில் எளிதேற்றி!
உலகத் தமிழின உள்ளத்து உறவாகி - வேதனை
தந்திங்கே போனதெங்கே!
எத்திக்கும் மௌனமாய் ஆனதிங்கே!சாய்ந்துபோனதோ? அறிவுச்சரித்திரமே! (ஏற்குமோ)
14.12.06.


4.
ஞானக்குயிலே!தேசக்குரலே!!
பாலா அண்ணா! பாலா அண்ணா!
அரசியல் மன்னா!!
எங்கள் பாலா அண்ணா!

அன்போடே உமையழைத்தோம்
அருகிருந்தே அறிவுதந்தீர்
அழவைத்தே மறைந்தீரோ? (பாலா அண்ணா)த
ணியாத தாகம் கொண்டு தமிழீழ கீதம் பாடிடவே!
தமிழின தத்துவ அரசியல் ஞானக் குயிலே!
உயர் வானில் உலவி வந்த
அறிவு நிலா! அண்ணா பாலா! (பாலா அண்ணா)

புரியாத சோகம் தந்து
விழி சிந்தும் ஈரம் தந்து
தேம்ப வைத்தே சென்றீரோ?
தமிழன்னைத் தாலாட்டில் உறங்குகிறீரோ??
இருள் நீக்க வானம் தந்த
ஈழ நிலா! அண்ணா பாலா! (பாலா அண்ணா)

உம் முகமே நினைவு வரும்
நினைத்து நினைத்து அழுகை வரும்
உம் வாக்கு தந்த வீரத்திலே!உயிர்த்து உயிர்த்து மனமிங்கே உரமாகும்
உரமாகி உரமாகி தமிழீழம் உருவாகும்
வாவா அண்ணா! அன்று பாலா அண்ணா!!(பாலா அண்ணா).16.12.06



5.
மாமணியே!
மனித மாணிக்கமே!
தேசத்தின் குரலே!
சர்வதேசத்தில் தமிழர்க்காய் முழங்கிய சங்கே!
உள்ளமெல்லாம் உச்சரிக்கும் அண்ணா பாலா! - நீரே
உயர்வானமிங்கு வந்துதிக்கும் அறிவு நிலா!
உமது பேச்சென்றும் இனிக்கும் பலா!
பாலா அண்ணன் எனும் நாமம்
காலம் போனாலும் போனாலும் மறையாதது.

சகாப்தம் படைத்த சானக்கியரே!
சகா வரம் பெற்ற அறிவொளியே!
வீசும் காற்றுப் போல்! ஒளிக் கீற்றுப் போல்!
என்றும் நிலைத்த நித்தியமே!

மாபெரும் மனித மாணிக்கமே! - தமிழ்
மண்ணில் உதித்த மாமணியே!
மங்காப் புகழ் பூத்த அறிவுச் சுடர்விளக்கே!
தமிழின வானில் அம்புலி!
தரணியில் தத்துவ அரசியல் அறிவுப்புலி!
தலைவன் அருகில் அரசியல் ஒளிகாட்டி!
தமிழின விடியலின் மதி நுட்ப வழிகாட்டி!
அரசியல் தத்துவமே!
அறிவியல் புத்தகமே!
அன்பெனும் பெட்டகமே!
ஈழமணி நாட்டினிலே தீராத தாகம் கொண்டீர்!
வீரத் தமிழ் தலைவன் அருகில் மாறாது நின்றீர்!
அரசியல் ஞானியே! அறிவு ஏணியே!
தமழர் நம் நெஞ்சிலே நினைவாகி நிலைத்தீரே!



6.
மதிபாலா மறையவில்லை - மனங்களிலே!
மலர்ந்தீரே! மலர்ந்தீரே! மார்கழிப் பூவே! (மதிபாலா மறையவில்லை)

கதிகாலம் அழைத்ததென்பீரோ?
விதியாலம் செய்ததென்பீரோ? மதிஞானியே!
எழுத்து வரிக் காதலனே! - எழுத்துலகில்
மலர்ந்தீரே! மலர்ந்தீரே! மார்கழிப் பூவே! (மதிபாலா மறையவில்லை)

பேச்சினிலும் பேனா வீச்சினிலும் - உமது
மூச்சினிலும்தத்துவமே! தமிழீழமே!
கண்ணாடி அணிந்தே - நம்முன்னாடி நிற்கின்றீர்
குறுந்தாடி முகவழகே!மலர்ந்தீரே!
மலர்ந்தீரே! மார்கழிப் பூவே! (மதிபாலா மறையவில்லை)

வரிப்புலிதான் வீழ்வதில்லை
வரலாறாய் எழுகின்றார்.
தேசத்தின் குரலே! தேசப் புகழே! - நம்
உயிரெல்லாம் முளைக்கின்றீர்!
பிறப்பாகி பிறப்பாகி
புதுப் பிறப்பாகி உயிர்கின்றீர்!
மலர்ந்தீரே! மலர்ந்தீரே! மார்கழிப் பூவே! (மதிபாலா மறையவில்லை)



'தேசத்தின்குரல்' நினைவு சுமந்து.
சு.பா.ஈஸ்வரதாசன் .

Wednesday 18 June 2008

உயிர்குள் முளைத்தவை...


என்னைத் துளைத்து எனக்குள் விதைத்து உயிர்குள் முளைத்தவை...

தேடிச் சோறு நிதந்தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள்பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங்
கூற்றுக்கிரையென பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போல - நான் வீழ்வேன் என்று
நினைத்தாயோ???

-பாரதியார்

----

கி.ஆ.பெ.விசுவநாதம்;


பொது நலத்துக்கு உழைக்கும் அறிஞர்களை
தன்னலத்துக்கு உழைப்பவர்கள் விரைவில் வென்று விடுவார்கள்.
முன்னது - ஆற்றின் ஊற்று நீர் போன்றது.
பின்னது - காட்டாற்றில் பெருகி வரும் வெள்ளம் போன்றது.

----
குறள்

49.காலம் அறிதல்

'ஞாலங் கருதினுங் கைகூடும் - காலம் கருதி இடத்தாற் செயின் -484.
'காலங் கருதி இருப்பர் - கலங்காது ஞாலங் கருது பவர்' -485

74. நாடு

'பிணியின்மை செல்வம் விளைவின்பம் - ஏமம் அணியென்ப நாட்டிற் கிவ் வைந்து' -738

ஈசன் மொழிகள்

'நாமெல்லாம் படைக்கப் பிறந்தவர்கள்'
-----
'எழுத்துயர படைப்பு
உயரும்
படைப்புயர சமூகம்
உயரும்'
---
ஒருமுறை..
ஒன்று சொல்வேன்.
ஒரு முறை மலரும் மலர் போல்
மொட்டவிழும் ஒருமுறை பெண்மை.
தொட்டவிழும் ஒருமுறை தாய்மை.
கண்கள் பேசியோ? பேசாமலோ?
காதல் ஒரு முறை
.24.12.02
--------

'எல்லாத் தரப்பினரும் நல்ல வாசிப்பாளர்களாக இருந்தால்
உலகே உயர்ந்துவிடும்.'

---------

'பிறப்பின் மகிமை புனிதமானது என்பதை நிரூபித்திட்ட
நன்நாளை நினைத்து நாமெல்லாம் மகிழ்ந்திருப்போம்.'

-------

அமைதியை நாடும் மனம்

ஆறுதல் தேடும் இடம்

ஏதோ மனிதச் சத்தங்கள் பொறுக்கும். 23.09.00

------
தவறியவை தவறியவையே!

தடுமாற்றம் என்பது இருந்துவிட்டால்
தவறுதலுக்கு தப்ப முடிவதில்லை.
தப்புதல் என்பது?
தப்பாகாது எனச் சொல்வதற்கு இல்லை.
13.09.00
-----

காதல் மொழி.
சின்ன சின்ன பார்வைகள் போதும்
சிரித்த கண்கள் பூசுதல் போதும்
எந்தன் மனதை திருடிக்கொண்டதுமில்லாமல்
இல்லை என்று பொய்யும் சொல்வது
பெண்மையின் உண்மையோ?
--------

Monday 16 June 2008

.

மலர்வுடன்..

இனிதே
அக, முகம் இருந்து விட்டால்
மகிழ்ந்திடும் வாழ்வே!

வையத்தின்
வாழவுதனில்
நம்மினத்தின் உயரம்தான் என்ன?
முகமில்லா உடலம்தான்
முண்டமென ஆகிவிடும்

மனதின்கண் பேசுமொழி,
பிறந்தமண் நுகரும்நாசி
செவிதனில் விழுந்திடாதா?
என் தேசமதின் சுதந்திர ராகம்.

விடியும், விடியும்
என்று
விளக்குகளை நாமேஅணைத்தால்…

சுடர் விடும் சூரியனே
இடர் துடைத்தே
எழுந்திட்டே வா!
ஆழமது வேர் விட்டு
இரும்புடைக்கும்
‘சுதந்திரம்’
மலர்வுடன்.

-அருவி1- ஊற்று8 -2002 பிரதமஆசிரியர் என் பதிவு.