மலர்வுடன்..
இனிதே
அக, முகம் இருந்து விட்டால்
மகிழ்ந்திடும் வாழ்வே!
வையத்தின்
வாழவுதனில்
நம்மினத்தின் உயரம்தான் என்ன?
முகமில்லா உடலம்தான்
முகமில்லா உடலம்தான்
முண்டமென ஆகிவிடும்
மனதின்கண் பேசுமொழி,
பிறந்தமண் நுகரும்நாசி
செவிதனில் விழுந்திடாதா?
என் தேசமதின் சுதந்திர ராகம்.
விடியும், விடியும்
என்று
விளக்குகளை நாமேஅணைத்தால்…
சுடர் விடும் சூரியனே
இடர் துடைத்தே
எழுந்திட்டே வா!
ஆழமது வேர் விட்டு
இரும்புடைக்கும்
‘சுதந்திரம்’
மலர்வுடன்.
-அருவி1- ஊற்று8 -2002 பிரதமஆசிரியர் என் பதிவு.
No comments:
Post a Comment