Sunday 8 June 2008

நினைவுடன்…

நினைவுடன்…

என்றும் வாழ்வோம்
இது நிலைக்கவே,
மண்ணில் வாழ்வுக்கு
வாழவேண்டும்.

மூச்சு நிரப்பிவிட்ட
உயிர்ப்பை
பேச்சும் கற்றுபின்
ஏதேதோ ஆகி
காத்துப் போகும்காலம்
எது என்று
புரியாத உலகம்.

இதில்
மற்றவர் வாழ
வழிதந்தார் ஒரு சிலரே!
தாமும் வாழார்,
தள்ளியிருப்பவரும்
வாழ தள்ளி இரார்.

அழியும் தேகம்,
தெரியும்
ஆனாலும்
நாளும் கேடாய் வேசமிடும்.

பாரும் ஒரு சேதி!
பிறந்த பின் வாழ்வதும்
இறந்த பின் வாழ்வதும்
அவரவர்
சுயமான,
நினைவுடன்..

மார்கழி 2002 – ஊற்று 10 – அருவி1 – பிரதம ஆசிரியர். என் பதிவு.

No comments: