மூச்சு இழந்து விடவில்லை
இனமே!
இளைத்துவிட்டாயா?
இடம்மாறி, இடம்மாறி
இடம்மாறிய நிகழ்வுகளால் - நீ
இளைத்துவிட்டாயா?
உதைபட்டு, உதைபட்டு
உருண்டு நெளிந்து
இதைவிட
இனியென்னஇடமாற்றம்?
அது ஒரு காலம்!
தொடர்ந்ததும் தொடர்வதும்
உன்னால் தானாம்
இனி வரும் காலம்
உன் கையில் என்கிறது
காற்று
‘காற்று இன்னும் மூச்சு இழந்து விடவில்லை’
காலம் சொல்லிற்று!
'ஈழமுரசு’ வில் வெளியாகியது.
No comments:
Post a Comment